வந்தே பாரத் மோதியதில் இளைஞரும், மானும் பலி

by Staff / 20-04-2023 03:20:01pm
வந்தே பாரத் மோதியதில் இளைஞரும், மானும் பலி

ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு மான் மற்றும் மற்றொரு நபர் உயிரிழந்தார். டெல்லியில் இருந்து அஜ்மீர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் வேகமாக வந்து நீலான் மான் மீது மோதியது. அது தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்தவர் மீது விழுந்தது. இதன் காரணமாக அந்த நபரும் உயிரிழந்துள்ளார். அல்வாரில் உள்ள காளி மோரி ரயில்வே லெவல் கிராசிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சிவதயாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via