இளம் பெண் உயிரிழப்பு

by Staff / 27-04-2023 12:01:29pm
இளம் பெண் உயிரிழப்பு

தெலங்கானாவின் கொத்தகுடேம் மாவட்டம் தெகுலப்பள்ளியில் நாய் கடித்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன், தாண்டாவை சேர்ந்த முத்தையா மற்றும் அவரது மகள் சிரிஷா (17) ஆகியோரை அவர்களது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதனால் முத்தையாவுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், ஷிரிஷாவுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. 4 நாட்களுக்கு முன்பு, ஷிரிஷா வெறிநாய்க்கடியின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே நிலைமை கைமீறிப் போய்விட்டது. செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சிரிஷா உயிரிழந்தார்.

 

Tags :

Share via