நேருக்கு நேர் மோதிய பைக்குகள் - 2 பேர் பலி
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. தெண்டலூர் மண்டலம் சோமவாரப்பாடு என்ற இடத்தில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மூவர் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :