40 பெண்களுக்கு ஒரே கணவர்

by Staff / 27-04-2023 01:01:43pm
40 பெண்களுக்கு ஒரே கணவர்

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது கிடைத்த தகவல்தான் தற்போது பேசுபொருளாக உள்ளது. அர்வால் சிட்டி கவுன்சில் பகுதியின் வார்டு எண். 7ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, இங்குள்ள 40 பெண்களும் தங்கள் கணவராக ஒரே நபரை அடையாளம் காட்டியுள்ளனர். பாலியல் தொழில் செய்யும் அந்த பகுதியில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, ​​பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவர் பெயர் ரூப்சந்த் என்றும், குழந்தைகள் தங்கள் தந்தையின் பெயரை ரூப்சந்த் என்றும் கூறியுள்ளனர். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகள் இதனால் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via