பரபரப்பு.. கட்டிடம் இடிந்து விழுந்த்து விபத்து
மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டியில் இன்று மதியம் 1.30 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் 40 முதல் 50 குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்ப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Tags :