சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரி கைது
திண்டுக்கல் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். அதே பகுதியில் உள்ள மண்டு காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். பூசாரி லட்சுமணன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தகவல் அறிந்து சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை விசாரித்த போலீசார் லட்சுமணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :