5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: 4 சிறுவர்கள் கைது

by Staff / 02-05-2023 11:29:41am
5 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: 4 சிறுவர்கள் கைது

விழுப்புரம்: 6 வயதுடைய 4 சிறுமிகள் மற்றும் வடமாநில தொழிலாளியின் 6 வயது மகள் உள்பட 5 பேருக்கு அதே பகுதியை சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய 4 சிறுவர்கள், செல்போனில் ஆபாச படம் காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள், தங்கள் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 4 சிறுவர்களும் கடலூர் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via