ஆட்டோ டிரைவர் கைது

by Staff / 02-05-2023 04:58:26pm
ஆட்டோ டிரைவர் கைது

பொள்ளாச்சி நந்தனார் காலனியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி குட்டிதம்பான்  கடந்த 2016ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த நாகராஜ் என்பவர் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்2017 ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு வெளியில் வந்த குட்டித்தம்பான் ஊஞ்சவேலாம்பட்டியில் வசித்து வருகிறார்இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து போன நாகராஜின் சகோதரர் ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமாரும், குட்டி தம்பான் உள்ளிட்ட இருவரும் திங்கட்கிழமை திப்பம்பட்டி பகுதியில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர் வாகனத்தை குட்டி தம்பான் ஒட்டி வந்துள்ளார்பின்னால் அமர்ந்து வந்த செந்தில்குமார் நந்தனார் காலனி வந்தபோது திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடால்குட்டி தம்பான் கழுத்தை அறுத்து தள்ளிவிட்டு தப்பினார்பின்னர் படுகாயமடைந்தகுட்டி தம்பானை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்பின்னர் குட்டி தம்பான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார்செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர் தனதுதம்பியின் கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க கழுத்தை பிளேடால் அறுத்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து செந்தில்குமார் நீதி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via