நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 03-05-2023 02:08:00pm
நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

கரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பள்ளி விடுமுறை என்பதால் ஒன்றாக சேர்ந்து நூடுல்ஸ் செய்து சாப்பிட முடிவு செய்தனர். அருகில் உள்ள மளிகை கடையில் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி தோட்டத்தின் அருகே சமைத்துள்ளனர். அப்போது சமயல் எண்ணெய் தீர்ந்துவிட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தை எண்ணெய் என்று நினைத்து அதனை நூடுல்ஸில் ஊற்றி கிளறி உள்ளனர். நூடுல்சை சாப்பிட்ட பிறகு அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 15 சிறுவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via