தேச விரோதிகளுடன் காங்கிரஸ் கூட்டணி - பிரதமர் சாடல்

by Staff / 03-05-2023 04:26:14pm
தேச விரோதிகளுடன் காங்கிரஸ் கூட்டணி - பிரதமர் சாடல்

காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாதம் 10ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள முதாபித்ரே பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரித்து ஆளும் கொள்கையுடன் இருக்கும் கட்சி காங்கிரஸ். தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தேச விரோதிகளுடன் கூட்டணி அமைக்கும். அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று, அக்கட்சி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் என்றார். மேலும், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதான தள கட்சிகள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via