கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
போதை இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நடவடிக்கை எடுத்து வருகிறார், அதன் அடிப்படையில் இன்று கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடமான வினோபா நகர். பாலம் அருகே சோதனை மேற்கொண்ட போது, கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கோவை தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் அகிலன் (வயது 24) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் விஜய் (வயது 51) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :