வீடு புகுந்து சிறுமி கற்பழிப்பு.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மலம்புழா பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனை வந்தடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுமியிடம் தனியாக நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (26) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் ரஞ்சித் அந்த பகுதியில் உள்ள பாஜக கட்சியில் இளைஞர் அணி நிர்வாகி எனவும் திருமணம் செய்துக்கொள்வதாக கூறிவிட்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்தார். பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ரஞ்சித் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டதத்தின் கீழ் கைது செய்தனர்.
Tags :