விமானி பணிப்பெண் பாலியல் வன்கொடுமை.

by Staff / 27-09-2022 01:27:43pm
விமானி பணிப்பெண் பாலியல் வன்கொடுமை.

தலைநகர் டெல்லியில் தனியார் விமான நிறுவனத்தில் 30 வயது பெண் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் மெஹ்ருலி பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே, அப்பெண்ணுக்கும் ஒரு ஆண் நபருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. அரசியல் கட்சியை சேர்ந்த அந்த நபர் பகுதி தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், விமான பணிப்பெண்ணின் வீட்டிற்கு நேற்றிரவு அந்த ஆண் நபர் மதுபோதையில் வந்துள்ளார். பின்னர், அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் மதுபோதையில் இருந்த அந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் அறையில் வைத்து பூட்டினார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via