விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

by Staff / 04-05-2023 01:51:03pm
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

திண்டுக்கல்  மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 60). இவர், நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எலிமருந்தை  குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via