மணிப்பூர் கலவரம் - 54 பேர் பலி

by Staff / 07-05-2023 01:22:55pm
மணிப்பூர் கலவரம் - 54 பேர் பலி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே சமீபத்தில் பழங்குடியின மக்களின் பேரணியில் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதால், அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பதற்றமான சூழலால் அங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via