இருமடங்கு பணம் தருவதாக ரூ 25 லட்சம் மோசடி
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கணவன், மனைவி தாங்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இரு மடங்கு பணம் தருவதாக கூறி ரூபாய் 25 லட்சம் மோசடி செய்துள்ளனர். 200 நாட்களில் இரண்டு மடங்கு தொகை திருப்பித் தரப்படும் என்று விளம்பரம் செய்ததை அடுத்து அதை நம்பி ஏராளமான மக்கள் முதலீடு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்கோவில் பட்டி பகுதியைச் சேர்ந்த 12 பேர், சுமார் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்தனர்.200 நாட்கள் கடந்தும் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப தரவில்லை.பணத்தை கட்டி ஏமாந்துடோம் என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags :