ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி.

by Admin / 14-05-2023 11:25:10pm
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி.

இன்று சென்னை எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான போட்டி நடந்தது டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது ஐந்து விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த கொல்கத்தா அணி 145 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு விளையாடி நான்கு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.மிகுந்த எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை காண ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் இரண்டே ரன்கள் எடுக்கக்கூடிய நிலையில் அவர் களத்தில் இறங்கி ஆடினார்.இந்தப் போட்டியோடு தோனி விளையாட மாட்டார் என்கிற கருத்து உருவாகி இருந்த நிலையில், டோனியின் கடைசி விளையாட்டை பார்ப்பதற்காக குவிந்த சென்னை ரசிகர்கள்தோனி கிரவுண்டை சுற்றி வருகிற காட்சியும் அவர் டென்னிஸ்பந்துகளைவீசியடித்தும் அடித்தும் தூக்கி வீசியும் தன்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தைஊட்டினார். இருப்பினும் சென்னை ரசிகர்கள் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். வர்ணனையாளா் முத்துவுக்கு ஒரு டீசா்ட்டை கொடுத்ததோடு அவர் மீது டென்னிஸ் பேட்டையும்அன்பால் தூக்கி வீசினார் . கவாஸ்கர் கூட்டத்தோடு ஓடிவந்து அவருடைய சட்டையில்தோனி யின்  கையெழுத்தை பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. தோனி கிரவுண்ட் முழுவதும் சிஎஸ்கே பனியன்களைரசிகர்களை பாா்த்து  தூக்கி தூக்கி வீசியவாறு வந்தார். சென்னை ரசிகர்கள்போட்டியின் தோல்வியை கண்டு துவண்டு போய் வெளியேறினர்...

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி.
 

Tags :

Share via