விமானப்படையின் துணைத் தலைவராக தீட்சித் பதவியேற்பு
விமானப்படையின் துணைத் தலைவராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் திங்கள்கிழமை பதவியேற்றார். ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரிக்குப் பிறகு அவர் அந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் தீட்சித், டிசம்பர் 6, 1986 அன்று இந்திய விமானப்படையின் போர் விமானத்தில் நியமிக்கப்பட்டார். அவர் வங்கதேசத்தில் உள்ள ஸ்டாஃப் கோர்ஸ் மற்றும் டெல்லியின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றவர். போக்குவரத்து விமானங்களில் 3,300 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவம் கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :