ரயிலில் அடிபட்டு பெண் பலி
திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் பலியானார். திண்டுக்கல் ஏ. வெள்ளோடு அருகே மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரெயிலில் அடிபட்டு, அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ். பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எவ்வாறு ரெயிலில் அடிபட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :