ஷோரூம் முன் காரை தீ வைத்து எரித்த நபர்
குஜராத்தின் கட்ச் நகரில் உள்ள ஒரு ஷோரூம் முன்பு வாடிக்கையாளர் ஒருவர் தனது காரை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் ஒருவர் ஷோரூமில் இருந்து வாங்கிய கார் தொடர்ந்து பழுதாகி, அதிக இரைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளது. அந்த நபர் காரை ஷோரூமுக்கு பலமுறை கொண்டு வந்தும் பயனில்லை. இதனால் விரக்தியடைந்த அந்த நபர் தனது காரை ஷோரூம் முன் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :