திமுக கவுன்சிலர் கொலையில் திருப்பம்
கரூர் பகுதியை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் ரூபா கடந்த சில நாட்களுக்கு முன் செப்டம்பர் 26 ஆம் தேதி காட்டுப் பகுதியில் அரை நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது முன்விரோதம் ரீதியாக நடந்த கொலையா என போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக பெண் கவுன்சிலர் ரூபா அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைக்காக, அவரது தோழியே கணவருடன் சேர்ந்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :