கடித்த நாயை கொடூரமாகக் கொன்ற நபர் கைது.
சூலூர் ரங்கநாதபுரம் பகுதியில் செங்காளியப்பன் நகரில் வசிப்பவர் விபீஷணன் (35). இவர் தனது சகோதரியான ராஜ கிருஷ்ணகுமாரி என்பவரது வீட்டில் தங்கி அப்பகுதியில் வேலைக்கு சென்று வருகிறார். ராஜ கிருஷ்ண குமாரிக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு ராஜ கிருஷ்ண குமாரியின் மகனான ரஜத்தை அவர்கள் வளர்த்த நாய் கடித்துள்ளது. அப்போது விபீஷணன் அந்த நாயை பிடித்து மொட்டை மாடியில் கட்டி உள்ளார் நாயை கட்டும் போது அவரையும் கடித்துள்ளது இதில் அதிர்ச்சி அடைந்த விபீஷணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாயானது வியாழக்கிழமை காலை இறந்துவிட்டது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் விலங்குகள் நல அமைப்பான ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர் அங்கிருந்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் சம்பவங்களை பதிவு செய்து கொண்டு சூலூர் காவல் நிலையத்தில் இது பற்றி விபீஷணன் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சூலூர் போலீசார் கைது செய்து விபீஷணனை விசாரித்து வருகின்றனர் வெள்ளிக்கிழமை இறந்த நாய்க்கு உடல் கூறு ஆய்வு பரிசோதனை செய்து விபீஷணன் மீது சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாயை கொடூரமாக தாக்கிக் கொன்ற நிகழ்வானது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Tags :