அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

by Staff / 20-05-2023 02:29:05pm
அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சாலையில் உள்ள முனிக்கோவில் அருகே வசித்து வந்தவர் கோபால்(வயது 58). இவருடைய மனைவி ஜெயலட்சுமி(43). கோபாலுக்கு கண்பார்வை தெரியாது என கூறப்படுகிறது. இதனால் இவர், மனைவி ஜெயலட்சுமியின் துணையோடு ஊர், ஊராக சென்று யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். வழக்கம்போல் நேற்று காலை சேதுபாவாசத்திரத்தை அடுத்த கழுமங்குடா அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கோபால் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கோபால் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் மீது மோதியது. வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via