சுற்றுலா பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிய பயங்கரம்
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ரிவர் ராஃப்டிங் செய்ய நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்நிலையில், ரிவர் ராஃப்டிங்கில் சுற்றுலா பயணிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இரண்டு படகுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், துடுப்புகளால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த வழிகாட்டிகள் அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை சரி செய்தனர். வீடியோவில், ஒரு நபர் மற்றொருவரை ராஃப்டிங் துடுப்பால் கொடூரமாக தாக்குவதும், மூன்று நபர்கள் படகில் இருந்து குதித்து நதியில் மூழ்குவதையும் காணலாம்
Tags :