5 வாள்கள் மற்றும் 615 கிராம் கிரிஸ்டல் கல் நிற பவுடரோடு ஒருவர் கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த மனுவேல் மகன் அண்டோ (47) என்பதும் அவர் மறைத்து வைத்திருந்த சாக்கு பையில் 5 வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிறிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்ததும் தெரியவந்தது.உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி அன்டோவை கைது செய்து அவரிடமிருந்த 5 வாள்கள் மற்றும் 615 கிராம் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :