மகளுக்கு திருமணம்.. தந்தை தற்கொலை

by Staff / 24-05-2023 01:43:04pm
மகளுக்கு திருமணம்.. தந்தை தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் மகளின் திருமணம் இன்னும் 8 நாட்களில் நடக்க இருந்த நிலையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். ரேகொண்டா மண்டலம் ராமண்ணகுடேம் தாண்டாவை சேர்ந்த வீர்யநாயக் (50) என்பவரது மகளுக்கு கடந்த 31ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விவசாய இழப்புடன் ரூ.13 லட்சம் கடனில் இருந்த அவரால் மகளின் திருமணத்துக்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் திங்கள்கிழமை இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via