அதிகாரிகள் அடித்ததாக ஜாபர் சாதிக் கூட்டாளி புகார்

by Staff / 10-05-2024 01:06:08pm
அதிகாரிகள் அடித்ததாக ஜாபர் சாதிக் கூட்டாளி புகார்

திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடித்ததாக கூறி, ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தம் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரி சுனில் சங்கர் அடித்து துன்புறுத்தியதாக மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via