கள்ளச்சாராய விற்பனை - காவல்துறையினர் 5 பேர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செவ்ய்யப்பட்டுள்ளனர். கண்ணமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன், சேத்துப்பட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன், தானிப்பாடி காவலர்கள் பாபு, உர்ஜின் நிர்மல் மற்றும் செங்கம் காவலர் சோலை ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கள்ளச்சாராயம் விற்றதற்க்காக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags :