விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்

by Editor / 29-05-2023 09:59:04am
 விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்

ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் செலுத்தப்படவுள்ளது. போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோள் திங்கள்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் மூலம் இந்தியாவின் வழிசெலுத்தல் அமைப்பு மேலும் மேம்படுத்தப்படும். நேவிகேஷன் சேவைகளுக்காக முன்னர் அனுப்பப்பட்ட 4 செயற்கைக்கோள்கள் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும், அவற்றை மாற்றுவதற்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு செயற்கைக்கோள் அனுப்பப்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

 

Tags :

Share via