கொலை வழக்கு கைதி உடல்நலக்குறைவால் பலி. 

by Editor / 02-06-2023 09:43:21am
கொலை வழக்கு கைதி உடல்நலக்குறைவால் பலி. 

நெல்லை மாவட்டம் நொச்சி குளத்தைச் சேர்ந்த கொம்பன் என்பவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவ்ருக்கு உடல் நிலை குறைவு காரணமாக பரோலில் ஒரு மாதம் சிறையை விட்டு வெளியே வந்துள்ளார்.இந்தநிலையில் கொம்பனுக்கு நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் உடனடியாக அவர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via