வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 02-06-2023 12:28:10pm
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிராஜ் என்பவர் மகன் பிபின் ராஜ் (21). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். தற்போது நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் தான் பாக்கும் வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் சமாதானம் செய்து வேலையில் தொடர அறிவுறுத்தியதாக தெரிகிறது.        இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது வீட்டு மேல் மாடி அறையில் பிபின் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.        இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via