ஒடிசா ரயில் விபத்து :கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து- முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

by Editor / 03-06-2023 09:06:48am
ஒடிசா ரயில் விபத்து :கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து- முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்து உள்ள சூழலில், 900- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.மீட்பு பணியானது துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு பெட்டி மட்டுமே மீதமுள்ளது எனவும் ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.1999க்கு பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்து என கூறப்படுகிறது.ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து.ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.கருணாநிதி நினைவிடம், சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே  நடக்கும் என அறிவிப்பு.

ஒடிசா ரயில் விபத்து :கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து- முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
 

Tags :

Share via