ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி
குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள தமாச்சன் கிராமத்தில் சனிக்கிழமையன்று மூன்று வயது சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், 40 அடி ஆழத்தில் குழந்தையைக் கண்டுபிடித்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். 19 மணி நேர உழைப்புக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலை ஆழ்துளைக் கிணற்றிற்கு இணையாக அருகில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி குழந்தையை வெளியே எடுத்தனர். ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :