நள்ளிரவில் குழந்தைகளை கடத்திய பெண்

by Staff / 05-06-2023 01:57:59pm
நள்ளிரவில் குழந்தைகளை கடத்திய பெண்

ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை மர்மநபர்கள் கடத்திச் சென்றனர். அருகில் இருந்த சிசிடிவி வீடியோ மூலம் குழந்தைகளை கடத்தியவர்கள் ஆட்டோ டிரைவர் இம்ரான் மற்றும் பிரவீனா என்ற பெண் என்றும் அடையாளம் காணப்பட்டது. மகான்காளி ஸ்டேஷன் போலீசார் இரண்டே மணி நேரத்தில் வழக்கை தீர்த்து வைத்து அவர்களை கைது செய்து குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்கள் குழந்தைகளை கடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via