பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. பரபரப்பு

by Staff / 26-06-2023 04:16:04pm
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. பரபரப்பு டெல்லியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாந்தினிசவுக்கில் டெலிவரி ஏஜென்ட் பட்டேல் சஜன் குமார் என்பவர் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். இந்நிலையில், அவர் சென்ற காரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கி முனையில் மிரட்டி பணப்பையை கொள்ளையடித்து சென்றனர். டெல்லியில் பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via