கடையநல்லூரில் 9இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 9இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடல்களில் நடத்தப்பட்டது.இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.<br /> இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். <br /> இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா ,ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி , மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி ,தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா இக்பால் நகர் ரய்யான் திடல் <br /> மதினா நகர் பள்ளி திடலில் அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் நடை பெற்றது .<br /> இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகளை இறைவனுக்காக பலியிட்டனர் அதன் பின்னர் அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் ,வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. <br /> Tags :