மனைவியை பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணம் செய்து அனுப்பிவைத்த கணவன்.
உத்திர பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், கணவன் ஒருவர் அவர் மனைவியை காதலனுக்கு முறையாக திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தாநகர்க்கு உட்பட்ட அமோய் கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை கணவர் கவனித்தார். இதையடுத்து கணவரே இருவீட்டு பெரியவர்களை அழைத்து தனது மனைவியை காதலனுடன் திருமணம் செய்து வைக்கும்படி சமாதானப்படுத்தினார்.Tags :