கல்லூரி மாணவி பலி

by Staff / 30-03-2023 02:15:15pm
கல்லூரி மாணவி பலி

கோவை ராமநாதபுரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ராஜா, கட்டிட தொழிலாளி. இவர் மகள் ரித்திகா (19), இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி. இ படித்து வந்தார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 3 நாளுக்கு முன் இவர் தனது காதலனுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை.
பெற்றோர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாணவி வீட்டிற்கு வந்தார். அவர் தனது காதலனுடன் செல்ல விரும்பவில்லை. பெற்றோருடன் இருப்பதாக போலீசாரிடம் கூறினார். பின்னர் இவர் வீட்டிற்கு சென்றார். அப்போது மாணவி தனது பெற்றோரிடம் நான் 3 நாளாக சாப்பிடவில்லை. எனக்கு பிரியாணி வேண்டும் என கேட்டார். பெற்றோர் பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தனரா. அப்போது ரித்திகா உடல் நலன் சரியில்லாமல் மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலர் பிரிவால் இவர் விஷம் குடித்து இறந்தாரா நக்ஷ அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via