தமிழுக்கு தான் முதலிடம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

by Editor / 20-07-2021 11:55:17am
தமிழுக்கு தான் முதலிடம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்கு தேவையான நபர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.

தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணி விதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம் 1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வாணையத்திற்கு சமீபத்தில் நான்கு புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via