12ம் வகுப்பு பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பம்.போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து கூத்தூர் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் மாதவன் என்கிற விஷால் (வயது 25), மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொல்லை.7 மாதம் கர்பிணியான மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை.மாணவி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags :