தாய் மற்றும் மகள் கூட்டு பலாத்காரம்

by Staff / 05-07-2023 02:18:28pm
தாய் மற்றும் மகள் கூட்டு பலாத்காரம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாட்டையே உலுக்கும் கொடூர சம்பவம் நடந்துள்ளது. சத்கான் பகுதியில் வாய் பேச முடியாத தாயையும், அவரது மகளையும் 8 பேர் நேற்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்களை கவுகாத்தியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும், மேலும் 4 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via