நில அபகரிப்பு வழக்கில் அனைவரும் விடுவிப்பு
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 1996 - 2001ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து மாமியார் சரஸ்வதி பெயரில், பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2003ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.Tags :