கோவில்பட்டி அருகே அரசு  பேருந்தின் கண்ணாடி உடைப்பு பரபரப்பு.

by Editor / 09-07-2023 09:34:53am
கோவில்பட்டி அருகே அரசு  பேருந்தின் கண்ணாடி உடைப்பு பரபரப்பு.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தலையால்நடந்தான் குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி விலக்கு அருகே வந்தபோது ஒரு மனநிலை பாதித்த பெண்ணும் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி கிராமத்தைச் சேர்ந்த வேல் மகன் சுடலைமுத்து (62) என்பவரும் ஒருவர் மீது ஒருவர் கற்களையும், கட்டைகளை எறிந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கல் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது விழுந்தது. இதில் பேருந்தின் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. உடனே இதுபற்றி பேருந்து ஓட்டுனர் பெருமாள் மற்றும் நடத்துனர் அசோக் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கயத்தாறு போலீசார் சுடலைமுத்துவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

Tags :

Share via