டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி

by Staff / 06-05-2024 04:21:35pm
டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற இளைஞர் திருமண நிகழ்வுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று கொண்டிருந்தார். டிராக்டரில் மேலும் 6 சிறுவர்கள் உடன் இருந்தனர்.
அப்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச்சென்றவர் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via