கோவிஷீல்டுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

by Staff / 06-05-2024 04:33:17pm
கோவிஷீல்டுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் பக்க விளைவுகள் குறித்து பரவலான அச்ச உணர்வு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. விசாரணைக்கு தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார். கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via