ஊசியால் குத்திய மகன்...ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்

by Staff / 09-07-2023 01:44:06pm
ஊசியால் குத்திய மகன்...ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் டெல்லியின் ரோகினி மாவட்டத்தில் ஒரு நபர் தனது சொந்த தாயை ஊசியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஜூலை 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. ரிங்கு (வயது 38) என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரது தாய் சத்வந்த் கவுர் (வயது 64) அவரை பலமுறை ஊசியால் குத்தினார். பின்னர் அவரே போலீசுக்கு போன் செய்து கொலை செய்ததாக கூறியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று தாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.
 

Tags :

Share via