தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6ஆம் வகுப்பு மாணவன் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் அடுத்த ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் திலிப்சிங். இவரது மகன் வருண்சிங் (12) இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வருண்சிங் உத்தனப்பள்ளி அருகே கோவிந்தபுரம் என்னும் இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் வருண்சிங் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Tags :