மீண்டும் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு
சொத்துக் குவிப்பு குறித்து தவறான தகவல்களை வெளிட்டதாக அண்ணாமலை மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, DMK Files என வெளியிட்டு தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. இதனால், இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார். இதனையடுத்து, அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 24ம் தேதி மீண்டும் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :