சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் பலி.

by Editor / 24-07-2023 10:33:35am
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் பலி.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மேலப்புளியங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த மகாதேவன் மகன் மணிகண்டன்,புளியங்குடி மனோகலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.விடுமுறை நாள் என்பதால் புளியங்குடி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் அருண்குமார் இவர் தன்னுடைய  நண்பரான மணிகண்டனை அழைத்துக் கொண்டு குற்றாலத்திற்கு குளிப்பதற்காக  மோட்டார் சைக்கிளில் இருவரும் புளியங்குடியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்றனர்  பைக்கை நண்பர் அருண்குமார் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார் அப்பொழுது சொக்கம்பட்டி காவல் நிலையத்தை அடுத்த அபாய வளைவில் பைக் சென்ற பொழுது குற்றாலத்தில் இருந்து குளித்துவிட்டு கலிங்கப்பட்டியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த சுற்றுலா வேணும் பைக்கும்  எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதியது இதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு  படுகாயம் அடைந்தனர் உடனே அருகில் உள்ளவர்கள்  படுகாயம் அடைந்த இருவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  மணிகண்டன் வரும் வழியிலே உயிரிழந்ததாக  தெரிவித்தனர். படுகாயம் அடைந்த அருண்குமாருக்கு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் பலி.
 

Tags :

Share via