முன்னாள் எம்.பி அன்வர்ராஜாமீண்டும் அதிமுக-வில் இணைந்தார், 

by Editor / 04-08-2023 10:46:25am
முன்னாள் எம்.பி அன்வர்ராஜாமீண்டும் அதிமுக-வில் இணைந்தார், 

அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபொழுதிலிருந்தே ஒன்றிய செயலாளர்,மாவட்டச்செயலாளர்,ஆட்சிக்குழு உறுப்பினர் என கட்சி பணியாற்றியவர் சட்டமன்ற உறுப்பினராக,அமைச்சராகவும் பதவி உயர்வு பெற்றவர்.ராஜ்யசபாஉறுப்பினராகவும் பதவி வகித்த அன்வர் ராஜா ெஜயலலிதா மறைவிற்கு பின்பு 2021 இல் சட்டமன்ற,பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வியுற்றதற்கு பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என்று  தொடர்ந்து  தம் கருத்தை வலியுறுத்தி  சொல்லியதால் ,கட்சியின்  கட்டுப்பாட்டை  மீறி விட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஒர் ஆண்டுக்கு மேலாக எந்தவிதமானஅரசியல் சார் நிகழ்விலிருந்து விலகியிருந்தவர் .தற்பொழுது கட்சியை விட்டு வெளியேறிவர்கள் மீண்டும் தன்னை இணைத்துக்கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்ட அழைப்பை ஏற்று தினந்தோறும் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியர்கள் மீண்டும் இணைந்து வரும் நிலையில் இன்று அ.தி.மு.க கட்சி மாவட்டச்செயலாளர் மதுரை மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு தன்னை இணைத்துக்கொண்டார்.

 

Tags :

Share via